இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், சீரம் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் இதுவரை 187 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடிக்கணக்கான தடுப்பூசிகள் விற்பனை ஆகாமல் கையிருப்பில் உள்ளதாக கோவிஷீல்டு உற்பத்தியை நிறுத்திவிட்டதாக சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனாவாலா தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து […]
