இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்துவிட்ட நிலையில், பூஸ்டர் தடுப்பூசி போடுவதில் மக்களிடம் ஆர்வம் இல்லை. வளரும் நாடுகளின் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அமைப்பின் வருடாந்திர பொதுக்கூட்டம் நேற்று புனேவில் நடந்தது. இக்கூட்டத்தில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆதார் பூனவல்லா கலந்துகொண்டார். இந்நிலையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது “நாங்கள் சென்ற டிசம்பர் முதலே கோவிஷீல்டு தயாரிப்பை நிறுத்திவிட்டோம். இதனால் அப்போது கையிருப்பிலிருந்த சுமார் 10 கோடி டோஸ்கள் காலாவதியாகி வீணாகி விட்டது. […]
