தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் குழந்தை விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 49 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜனதா,இந்து முன்னணி மற்றும் தமிழ்நாடு மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று காலை தூத்துக்குடியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் வைத்து ஆய்வாளர் சிவலோகநாயகி தலைமையில் பொது ஏலம் நடைபெற்றது. இதில் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் […]
