கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முசுவனூத்து அணைப்பட்டி பகுதியில் 300 ஆண்டுகள் பழமையான வீரியகாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் மர்மநபர்கள் கோவிலிலிருந்த 2 உண்டியல்களை பெயர்த்தெடுத்து சுமார் 500 மீட்டர் காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்று அதில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். இதனை அடுத்து கோவிலின் நடையை திறந்த பூசாரியும், நிர்வாகியுமான கொண்டன் செட்டி என்பவர் உண்டியலை காணவில்லை என அதிர்ச்சி […]
