கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோடீஸ்வரன் நகரில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் கோவிலை திறந்த பூசாரி உண்டியல் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பூசாரி அப்பகுதியில் உள்ள கோவில் நிர்வாகியிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர்கள் இதுகுறித்து […]
