ராஜபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், சமுசிகாபுரம், வாகைக்குளம்பட்டி போன்ற பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்துள்ளது. இந்த கனமழையில் ராஜபாளையத்தில் 13 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது.இந்நிலையில் வாகைகுளம்பட்டி கண்மாய் நிரம்பி கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வட்டாட்சியர் ராமச்சந்திரன், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட பல அதிகாரிகள் வந்து சேதமடைந்த வீடுகளை ஆய்வு செய்தனர். பின்னர் வீடுகளுக்குள் புகுந்த […]
