கோவிலில் நகை, வெள்ளி வேல் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரவுசேரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆதினமிளகி அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பாதுகாப்பு பணிக்காக 3 இரவு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அன்று காவலர்கள் பணிக்கு வரவில்லை. இந்த கோவிலில் உள்ள ஆதினமிளகி அய்யனாரை அப்பகுதியில் வசிக்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தெய்வமாக வணங்கி வருகின்றனர். இந்நிலையில் பூசாரி பூஜைகளை […]
