கொரானா தடுப்பு நடவடிக்கைகளின்படி புத்தாண்டையொட்டி மாவட்டத்தில் தற்காலிகமாக 93 சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து தேவாலயங்கள் மற்றும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் பொது இடங்களில் மக்கள் கூடி புத்தாண்டை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கேளிக்கை விடுதிகள் உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கூடுவது, மது அருந்திவிட்டு வாகனங்களில் செல்வது, போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் […]
