இந்தியாவின் தடுப்பூசியை தென்னாப்பிரிக்கா திருப்பி அனுப்பப் போவதாக வெளியான தகவல் ஒரு வதந்தி என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜகா இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியை, சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா, “கோவிட் ஷில்டு”என்ற பெயரில் தயாரித்து வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசியின் ஒரு மில்லியன் டோஸ்களை தென்னாபிரிக்கா வாங்கி பரிசோதனை செய்தது. ஆனால், தென்னாப்பிரிக்காவில் இந்தியாவின் தடுப்பு மருந்து குறைந்தபட்ச பலனை அளித்தது. அதனால் அவர்கள் தடுப்பூசி செலுத்துவதை நிறுத்தினர். […]
