இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் தற்போது 6 முதல் 12 வயது வரை உள்ளவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் ஒன்றிய அரசு அனுமதியுடன் தடுப்பூசி வழங்கப்பட்டது. […]
