மதுரை உயர்நீதிமன்றத்தில் பாலு என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் பிஎஸ்சி கம்யூனிகேஷன் ஹெல்த் என்ற மருத்துவ படிப்பை நாங்கள் முடித்துள்ளோம். எங்களுடைய மருத்துவ படிப்பை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சங்கத்தில் பதிவு செய்ய கோரி விண்ணப்பித்தோம். ஆனால் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் எங்களுடைய கோரிக்கையை நிராகரித்துவிட்டது. எனவே அவர்கள் நிராகரித்த கோரிக்கையை தடை செய்துவிட்டு எங்களுடைய படிப்பை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு […]
