உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னாவ் பகுதியில் பிரசித்தி பெற்ற சந்திரிகா தேவி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலுக்கு கான்பூர் மற்றும் கதம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 50 பேர் டிராக்டரில் சென்றுள்ளனர். இவர்கள் சாமி தரிசனம் முடிந்த பிறகு டிராக்டரில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென நிலை தடுமாறிய டிராக்டர் ஒரு குளத்தில் கவிழ்ந்தது. இந்தக் கோர விபத்தில் 27 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவலின் பேரில் மீட்பு படையினர் […]
