தமிழ்நாடு கோவில்களில் 1977ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இல்லாத தங்க நகைகளை உருக்கி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் காணிக்கையாக பெறப்பட்ட தங்க நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி டெபாசிட் செய்ய முடிவெடுத்தது தொடர்பான அறிவிப்பிற்கு தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த ஏ.வி கோபால கிருஷ்ணன், திருவள்ளூரைச் சோந்த எம்.சரவணன் ஆகியோா் தனித்தனியே உயர் நீதிமன்றத்தில் மனு […]
