கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த ஊழியரை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 213 மதுபான கடைகள் இயங்கி வருகிறது. இதில் சில கடைகளில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பதாக குற்றசாட்டு பெறப்பட்டது. இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் வடக்கு வீதியில் இயங்கிவரும் ஒரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளர் அர்ச்சுணன் என்பவர் கூடுதல் விலைக்கு மதுவை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேட்டபோது அர்ச்சுணன் அலட்சியமாக பேசியுள்ளார். இதனை அறிந்த டாஸ்மாக் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு […]
