இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சே நாடு திரும்பியிருக்கும் நிலையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடுமையாக நிதி நெருக்கடி ஏற்பட்டது. எனவே, அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபரின் மாளிகைக்குள் நுழைந்தார்கள். எனவே, அப்போது அதிபராக இருந்த கோட்டபாய ராஜபக்சே நாட்டிலிருந்து தப்பினார். மாலத்தீவிற்கு சென்ற அவர், அங்கிருந்து சிங்கப்பூர் சென்று சில நாட்கள் தங்கிவிட்டு தாய்லாந்துக்கு சென்று விட்டார். […]
