கோட்டை சுற்றுச்சுவர் நடைபாதையில் செல்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக வேலூர் கோட்டை கடந்த ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி அடைக்கப்பட்டது. இதனால் கோட்டை வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில், தேவாலயம், அருங்காட்சியகங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து காந்தி சிலை அருகில் இரும்பு தடுப்புகள் அமைத்து காவல்துறையினர், தொல்லியல் துறை ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் கடந்த மாதம் 28ஆம் […]
