கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே லஞ்சம் வாங்கும் கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் பிச்சையெடுத்து லஞ்சம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எடுத்தாவை நத்தம் கிராமத்தில் பணியாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலர் பெரியாபிள்ளை முதியோர் விதவை உதவி தொகை பெற்று தர லஞ்சம் வாங்குவதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வாங்கிய லஞ்ச பணத்தை திரும்ப வழங்க கோரியும் லஞ்சம் வாங்கும் கிராம நிர்வாக அலுவலரை பணி நீக்கம் செய்யக்கோரியும் […]
