குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் இயங்கி வரும் மெக்டொனால்டு கடைக்கு பார்கவ் ஜோஷி என்பவர் தன் நண்பர்களுடன் சென்றார். இவர் பர்கர் மற்றும் கோக் குளிர்பானம் போன்றவற்றை ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து கோக் குடித்து கொண்டிருந்த போது அந்த பானத்தில் 1 பல்லி இருந்துள்ளது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பார்கவ், உடனடியாக அதனை படம்பிடித்து வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டார். இவ்வீடியோ உடனே சமூகவலைதளங்களில் வைரலாகியது. அதன்பின் ஆமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக செயல்பட்டு ஆய்வு மேற்கொண்டு, கடைக்கு […]
