கொழுந்தன் ஒருவர் அண்ணியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் வசித்து வருபவர் ரோஹித். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இவருடைய மூத்த சகோதரர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் தனது சகோதரரின் மனைவி மற்றும் தாயார் ஆகியோருடன் ரோஹித் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ரோஹித் தன்னுடைய அண்ணன் மனைவியான அண்ணியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து காவல் நிலையத்திற்கு சென்று தன் அண்ணியை கழுத்தை நெரித்து கொலை செய்ததை […]
