ஓய்வு பெற்ற நர்ஸ் வீட்டில் திருடப்பட்ட தங்க நகைகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கொல்லம்பாளையம் பகுதியில் சாத்துன்பீ என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வே மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக சாத்துன்பீயின் கணவர் ஜாகிர் உசேன் இறந்து விட்டதால் அவர் தன்னுடைய மகளுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சாத்துன்பீ மற்றும் அவருடைய மகள் ஆகியோர் திருநெல்வேலி மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் அக்டோபர் மாதம் […]
