திருப்பூர் மாவட்டத்திற்கு புகழ் சேர்க்கும் காங்கேயம் இன மாடுகளின் பாலுக்கு என தனியான சந்தை உருவாக்கும் விதமாக பால் கொள்முதல் மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கேயம் ரக நாட்டு மாடு வளர்க்கும் விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றார்கள். காங்கேயம் பகுதியை பூர்வீகமாகக் கொண்டு தோன்றியதனால் ஊரின் பெயரிலே இந்த இன மாடுகள் அழைக்கப்படுகிறது. இந்த காங்கேயம் இன காளைகள் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், ஜல்லிக்கட்டில் பிடிபடாத வீரத்திற்கு பெயர் பெற்றவை ஆகும். அதேபோல […]
