கூகுள் நிறுவனம், சிறப்பு நாட்களில் கவன ஈர்ப்புச் சித்திரத்தை(கூகுள் டூடுல்) வெளியிட்டு சிறப்பித்து வருகிறது. அத்துடன் ஒவ்வொரு வருடமும் சிறப்பு கவனஈர்ப்புச் சித்திரத்துக்கான போட்டியையும் நடத்தி வருகிறது. 2022ம் வருடம் இந்தியாவில் கூகுள் சிறப்பு கவனஈர்ப்புச் சித்திரம் வெற்றியாளராக கொல்கத்தாவைச் சேர்ந்த சிறுவன் ஷ்லோக் முகர்ஜி அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அத்துடன் இவரது சிறப்பு கவனஈர்ப்புச் சித்திரம் இன்று கூகுளில் இடம்பெற்றுள்ளது. நாடு முழுவதும் கூகுள் நடத்திய இப்போட்டியில் 100க்கும் மேற்பட்ட நகரங்களிலிருந்து 1 -10 ஆம் வகுப்பு […]
