தம்பியை கொலை செய்த வழக்கில் அண்ணன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கூகனூர் கிராமத்தில் விவசாயியான பாலையா(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுப்பிரமணியன்(59) என்ற அண்ணன் உள்ளார். சுப்பிரமணியனுக்கு குமார், விக்னேஸ்வரன்(31) என்ற இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் குமாருக்கு தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதனை அடுத்து குமார் வேலை பார்ப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்று விட்டார். அந்த சமயம் […]
