கொலை வழக்கில் கைதான 6 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திம்மராஜபுரம் பகுதியில் சுந்தரபாண்டியன், முத்துக்குமார், பழனி, நாராயணன், ஸ்ரீ ராம்குமார், மாணிக்கராஜா ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் மீது பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் இசக்கிமுத்து என்பவரை கொலை செய்த வழக்கு உள்ளது. இதனால் காவல்துறையினர் இவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை […]
