கொரோனா தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடங்கப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் முடிவடையும் நிலையில் எப்படி இருந்தது ஒரு மாத ஊரடங்கு. இந்தியாவில் நோய் தாக்குதல் ஜனவரி 30-ஆம் தேதி கேரளாவில் கண்டறியப்பட்டது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த கேரள மாணவர் ஒருவர் கேரளாவிற்கு திரும்பிய பின்பு அவருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக வெளிநாடுகளிலிருந்து வந்த பலருக்கும் அறிகுறிகள் கண்டறியப்பட்டன. கொரோனா தொற்று நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை […]
