ஆஸ்திரேலியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்று பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இதனை தடுப்பதற்கு அனைத்து நாடுகளும் முழு ஊரடங்கை அமலுக்குக் கொண்டு வருகிறது. அதன்படி ஆஸ்திரேலிய நாட்டிலிருக்கும் விக்டோரியா மாகாணத்திலும் கொரோனா தொற்று பரவி வருவதால் அந்நாட்டு அரசு கடந்த மாதம் 27 ஆம் தேதி முதல் ஒருவாரத்திற்கு முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. மேலும் பொதுமக்களை அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் அரசாங்கம் வலியுறுத்தியது. […]
