சென்னையில் உள்ள சைதாப்பேட்டையில் 60 வயது மேற்பட்டவர்களுக்கு இல்லம் தேடி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி போன்றோர் கலந்துகொண்டனர். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்கள் சந்தித்து கூறியதாவது, “தமிழ்நாட்டில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறும். இதுவரையிலும் 92,522 நபர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தற்போது […]
