வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணியும் விவகாரத்தில் குழப்பம் எழுந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்தில் இருக்கின்றது. அங்கு மட்டும் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய தேவைக்காக பொருட்கள் வாங்கும்போது வெளியே வருபவர்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று நேற்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. இதையடுத்து இன்று காலை முகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தவர்களிடம் காவல்துறையினர் அபராதம் விதித்தனர். மருந்தகங்களில் முகக்கவசம் இல்லை என பொதுமக்கள் தெரிவித்து கைக்குட்டை, துண்டு, […]