அஜ்மானில் கொரோனா லேசர் பரிசோதனை மையத்தை அஜ்மான் பட்டத்து இளவரசர் தொடங்கி வைத்துள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பரவலைத் தடுக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அவ்வகையில் அமீரகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கொரோனாவை பரிசோதனை செய்யும் கொரோனா லேசர் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அமீரகத்தின் வடக்குப் பகுதிகளில் இவ்வாறான பரிசோதனை மையம் முதன்முதலாக அமைக்கப்பட்டது. அந்த மையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றது. மேலும் […]
