தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நின்றதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் அறிவித்த ஊரடங்கினாலும், தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்து வருவதினாலும் தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகின்றது. இந்நிலையில் தடுப்பூசி பணிகளை அதிகப்படுத்துவற்கு தேவையான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது. தேனி மாவட்டம் முழுவதிலும் 15 கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனையடுத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் […]
