இன்று தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் மக்கள் ஆர்வமாக சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள பெறுகவாழ்ந்தான் அருகே காந்தாரி கிராமத்தில் தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. இதில் கிராம மக்கள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அப்போது தடுப்பூசி செலுத்தும் பெண் செவிலியர் ஒருவர் செல்போன் பேசிக்கொண்டே ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளார். பணி நேரத்தில் செல்போன் பேசிக்கொண்டு கவனக்குறைவாக தடுப்பூசி செலுத்தும் இத்தகைய செவிலியர்கள் தடுப்பூசி […]
