கேரளாவில் கொரோனாதேவி ஆலயம் ஒன்று உருவாகியுள்ளது, கொரோனா போரில் ஈடுபவர்களுக்காக இக்கோவிலில் வழிபாடு நடத்தப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் வழிபட்டு தலங்கள் மூடப்பட்டநிலையில் தற்போது படிப்படியாக வழிபட்டு தலங்கள் திறக்கப்பட்டுவருகின்றன. இருந்தும் கொரோனாவுக்கு பயந்து சமூக இடைவெளியுடன் கடவுளை கும்பிடவேண்டியே நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் கொல்லம் மாவட்டம் கடகல் என்ற இடத்தில் கொரோனா தேவி ஆலயம் ஒன்று உருவாகியுள்ளது இந்த ஆலயத்தை அணிலன் என்பவர் கட்டியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை சிலையாக நிறுவி அதற்க்கு பூஜை செய்துவருகிறார். […]
