கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறி மீன் வாங்க குவிந்த வியாபாரிகள், பொது மக்களால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மீன்களின் இனப்பெருக்கத்திற்காக தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் கடந்த 14ஆம் நாள் நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதோடு.. இரண்டு மாதங்கள் இந்த தடைக்காலம் நீடிக்கும். ஆனால், கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடித்தொழில் நடைபெற்று வருவதால் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மீன் வாங்கி செல்கின்றனர். […]
