கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் காற்றில் பறக்க விட்டு பொதுமக்கள் சுற்றி திரிகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் பல அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தங்களது அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக காய்கறி, மளிகை போன்ற கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஏராளமான பொதுமக்கள் ஒரே நேரத்தில் […]
