விருதுநகர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை கொரோனா வார்டுகள் அருகே கொரோனா நோயாளிகள் பயன்படுத்திய கழிவுகளை கொட்டுவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அய்யனார் கோயில் செல்லும் சாலையில் இருக்கின்ற தனியார் கல்லூரி வளாகத்தில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா நோயாளிகள் பயன்படுத்திய பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் உணவு பொட்டலங்களின் கழிவுகள் போன்றவை கொரோனா வார்டுகள் அருகிலேயே குவியல் குவியலாக கொட்டப்படுகின்றன. அந்தக் கழிவுகளை சரியான முறையில் […]
