கொரோனா ஊரடங்கிற்கு எதிராக திரண்ட மக்களை கட்டுப்படுத்த போலீசார் மிளகு தெளிப்பானை பயன்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக ஊரடங்கு மற்றும் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி வருகின்றது. இதனையடுத்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பல பகுதிகளில் அதிக அளவில் கொரோனா பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த நகரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]
