குழந்தைகளின் முக்கிய உடல் உறுப்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கால் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தங்களது நேரங்களை கணினி மற்றும் செல்போன்களில் அதிக அளவில் செலவிட்டு வருகின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு குறுகிய பார்வை அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் ஹாங்காங்கில் உள்ள விஞ்ஞானிகள் கொரோனாவுக்கு முன்பு 6 வயது குழந்தைகளில் 17 சதவீதமாக இருந்த குறுகிய பார்வை கொரோனா ஊரடங்கு காரணமாக 28 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கண்டறிந்துள்ளனர். […]
