கொரோனாவிலிருந்து குணமடைவோரில் எட்டில் ஒருவர் 140 நாட்களுக்குள் உயிரிழக்கிறார் என்று அதிரவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிரிட்டனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பும் கொரோனா நோயாளிகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் 5 மாதங்களுக்குள் மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் எட்டில் ஒருவர் மீண்டும் கொரோனா பிரச்சனைகளால் உயிரிழப்பதாக ஆய்வு ஒன்றின் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Leicester பல்கலைக்கழகமும் தேசிய புள்ளி விவரங்கள் அலுவலகமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் கொரோனாவில் முதல் […]
