கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு தடைவிதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்உத்தரவிட்டுள்ளார். இது குறித்து ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் இக்கோயிலின் பின்புறம் உள்ள 14 கிலோமீட்டர் மலையை சுற்றி கிரிவலம் செல்வதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இந்த மாதம் பவுர்ணமி கிரிவலம் 20ஆம் தேதி அதிகாலை 5.20 மணிக்கு முதல் 21ஆம் தேதி காலை 5.51 […]
