கொய்யாக்காய் என்று நினைத்து விஷ காய்களை சாப்பிட்ட 4 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாசரிபாளையம் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார், பூவரசன், உதயகுமார் மற்றும் நிவேஷ் ஆகிய 4 சிறுவர்கள் சாலையோர வேலியில் உள்ள காட்டாமணக்கு செடியில் இருந்த காய்களை கொய்யாக்காய் என்று நினைத்து பறித்துச் சாப்பிட்டுள்ளனர். அது விஷத்தன்மை வாய்ந்த காய்கள் என்பதால் சிறிது நேரத்தில் 4 சிறுவர்களுக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அவர்களது பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் […]
