கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே புலவன்விளை பகுதியில் சுந்தர் ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும் 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சுந்தர் ராஜூக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுந்தர்ராஜ் விஷம் குடித்துவிட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் […]
