கொட்டும் மழையிலும் சாலையின் நடுவே ஆண் ஒருவரின் சடலம் அனாதையாக கிடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வருபவர் பிரேம்நாத். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம் போல சம்பவத்தன்று வேலையை முடித்து விட்டு மாலை வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது பூந்தமல்லி நெடுஞ்சாலை அரசு பஸ் பணிமனை அருகே சென்றுள்ளார். அந்த நெடுஞ்சாலையில் குண்டும் குழியுமாக இருந்துள்ளது. இதனால் திடீரென பிரேக் பிடித்துள்ளார். அப்போது அவர் பின்னால் […]
