ஈரோடு மாவட்டம் கொடுமணலில் நடைபெற்று வரும் அகழாய்வில் பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரும்பை உருக்க பயன்படுத்தக்கூடிய உலை, விலங்கின் மண்டை ஓடு ஆகியவை கிடைத்துள்ளது. பெருங்கற்கால கல்வட்டம், ஈம சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகழாய்வு பணிகள், கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. குறிப்பாக, தமிழகத் தொல்லியல் துறையின் தலைமை அதிகாரி ரஞ்சித் தலைமையிலான அலுவலர்கள் 5 குழுக்களாகப் பிரிந்து கொடுமணலில் ஏற்கனவே அளவீடு செய்து பிரிக்கப்பட்டிருந்த பகுதிகளில் அகழாய்வு […]
