நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர். தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 33 வார்டுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 57 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பதற்றமான 17 வாக்குச்சாவடிகளில் காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவை நடத்த காவல்துறையினர் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். […]
