வாழைநார் மூலம் கைவினைப் பொருட்கள் செய்யும் உற்பத்தி கூடத்தை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு திறந்து வைத்தார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்மநேரி பகுதியில் காதி கிராப்ட் சார்பில் வாழைநார் மூலம் கைவினை பொருட்கள் உற்பத்தி செய்யும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, களக்காடு பகுதிகளில் அதிகமாக வாழைகள் பயிரிடப்பட்டு பெருமளவிலான வாழைப்பழங்கள் விற்கப்படுகிறது. எனவே களக்காடு வட்டார பகுதி வாழை பயிரிடுவதற்கு […]
