தேனி மாவட்டத்தில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள கைலாசபட்டியில் ரேசன்கடை ஓன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசிகள் விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இதனால் அரிசி எவ்வித பிரயோஜம் இல்லை என வேதனையடைந்துள்ளனர். இதனையடுத்து நேற்று அப்பகுதி மக்கள் பெரியகுளம் நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து தகவலறிந்து வந்த தென்கரை காவல்துறையினர் […]
