தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 550 கோவில்களுக்கு 1,500 கையடக்க கருவிகளை (ஸ்வைப்பிங் எந்திரம்) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவில் இணை கமிஷனர்களிடம் வழங்கினார். இதில் கமிஷனர் ஜெ.குமரகுருபரன் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தார். இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் பேசியதாவது “550 கோயில்களில் பக்தர்கள் எளிதில் பயனடையும் அடிப்படையில் கோயில் சேவைகளுக்கு இணைய வழியில் முன்பதிவு செய்து கொள்ளவும், கட்டண சீட்டு மையங்களில் கணினி மூலமாக ரசீதுகள் […]
