சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் அருகில் புளியம்பட்டி பகுதியில் சென்ற மே மாதம் ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் அவர்கள் வைத்திருந்த பையில் 2 கைத்துப்பாக்கிகள், கத்தி, முக மூடிகள் போன்றவை இருந்தது. இதனையடுத்து அவர்களை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த என்ஜினீயர் சஞ்சய் […]
