அம்மன் கழுத்தில் இருந்து நகையை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வல்லம்-திருச்சி சாலையில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று மாலை செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்தனர். இந்நிலையில் வாலிபர் ஒருவர் சாமியை தரிசனம் செய்வது போல் உள்ளே சென்று அம்மன் கழுத்தில் போடப்பட்டிருந்த தங்கத்தால் ஆன பொட்டு தாலியை அறுத்து கொண்டு ஓடியுள்ளார். […]
