அண்ணனை கொலை செய்த தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நடராஜபுரம் பகுதியில் தங்கபாண்டியன்-ஆறுமுகதாய் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு செல்லத்துரை, முத்துச்செல்வம் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் செல்லத்துரை தினமும் மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். அதைப்போல் நேற்றும் மது குடித்துவிட்டு ஆறுமுகதாயிடம் பணம் கேட்டு தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். இதனை பார்த்து ஆத்திரம் அடைந்த முத்துச்செல்வம் வீட்டிலிருந்த கட்டையை கொண்டு செல்லத்துரையை சரமாரியாக தாக்கியுள்ளார். […]
